2018 கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கு நிவாரண பொருட்கள்!

 


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அரிசி, காய்கறி, பால்பவுடர், துணிமணி என 25 லட்சம் ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, உடை, உறைவிடம் இன்றி தவித்து வரும் நிலையில், அரசு தவிர பல்வேறு தன்னார்வ தொண்டர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் இருந்து 3 லாரிகளில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிறுவனர் பி.டி. செல்வகுமார் அனுப்பி வைத்தார்.

பணம் உணவுப்பொருள் மட்டுமில்லாமல், விவசாயிகளுக்குத் தேவையான மா, வாழை, கொய்யா போன்ற மரக்கன்றுகளும் அனுப்பி வைக்கப்பட்டன. கஜா புயலால் மரங்கள் எல்லாம் அடியோடு சாய்ந்த நிலையில், மீண்டும் பசுமை பொலிவுறச் செய்யும் பொருட்டு இந்த மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தன்னார்வ தொண்டர்கள் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நடுகின்றனர். இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்

Post a Comment

Previous Post Next Post